இலங்கை இராணுவப்பாதுகாப்புடன் யாழில் கொள்ளை..!! இறுதியில் நடந்த சம்பவம்.!

செய்திகள்

யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையிலிருந்து 780 கிலோ இரும்பைத் திருடிய குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள சிமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்களை 2013ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களால் வெட்டி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தன.காலத்துக்குகாலம் இந்த நடவடிக்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் வாகனம் ஒன்றில் இரும்புகளை வெட்டி ஏற்றிச் செல்லத் தயாராகவிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் அவர்களுக்கு உதவிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 3 பேரும் கைதாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *