கடவுச்சீட்டு பெறக் காத்திருப்போருக்கு விசேட தகவல்..!! தயவு செய்து வரவேண்டாம்.!

பிரதான செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொது மக்களை முன் பதிவின்றி கடவுச்சீட்டு சேவைகளுக்கு வர வேண்டாம் என அறிவித்துள்ளது.முன்னதாக திததி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தற்போது சேவைகளை வழங்குவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கடவுச்சீட்டை விரைவாக வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆனாலும், விடுமுறையில் நாட்டிற்கு வருபவர்கள், வெளிநாட்டில் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் மற்றும் வேறு காரணங்களுக்காக உடனடியாக புறப்பட வேண்டியவர்கள் உரிய ஆவணங்களுடன் திணைக்கள சேவையினை பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *