உண்மையான மன்னிப்பு என்பது ஒருவரின் செயலுக்கான பொறுப்பை ஒப்புக்கொள்வது, வருத்தத்தை வெளிப்படுத்துவது மற்றும் எதிர்காலத்தில் அந்த செயலை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான உதிர்வாதமாகும். ஒருவரின் எண்ணத்தைப் புரிந்துகொள்வதற்கும், உறவை சரிசெய்வதில் பணியாற்றுவதற்கும் நேர்மையான முயற்சியை மேற்கொள்வது முக்கியம்.

மக்கள் அமைதியைக் காக்கவும், நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் மன்னிப்புக் கேட்கும்போது, அவர்கள் செய்தது தவறு என்று அவர்கள் மனதளவில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்பு கேட்டால், பாதிப்பு ஏற்படலாம் அல்லது அதிகாரம் மற்றும் அந்தஸ்து இழப்பு போன்றவற்றை அனுபவிக்க நேரிடும் என்று சிலர் பயப்படலாம்.
இந்த நபர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வது அல்லது தொடர்புகொள்வது கடினம். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவோ அல்லது திருத்தங்களைச் செய்யவோ நேர்மையான முயற்சிகள் எதுவும் செய்யாமல், அவர்கள் செய்த தவறை திருத்திக் கொள்ளாமல் வெறும் வாயளவில் மன்னிப்புக் கேட்பார்கள். எப்போதும் போலியான மன்னிப்பு கேட்கும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்மிகவும் பிடிவாதமான ராசிகளில் ஒன்றான மேஷ ராசிக்காரர்கள் தங்கள் குறைகளை ஒப்புக்கொள்வது என்பது மிகவும் அரிது. மன்னிப்புக் கேட்பது மேஷ ராசிக்காரர்களை வெட்கப்படச் செய்யலாம், ஏனெனில் அது அவர்கள் மற்றொருவரை காயப்படுத்தியிருப்பதைக் குறிக்கிறது. அவர்களால் அடிக்கடி மன்னிப்பு கேட்க முடியாது மற்றும்சுயமரியாதை பாதிப்பு போன்ற

ஆழமான உணர்வுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் மன்னிப்புக் கேட்க நேர்ந்தாலும் அவர்கள் அதனை ஒருபோதும் மனதிலிருந்து கேட்க மாட்டார்கள், அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தவர்கள் மீது பகை கொள்ளவும் வாய்ப்புள்ளது. அவர்கள் செய்த தவறை எளிதில் மறந்து விடுவார்கள் ஆனால் அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தவர்களை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
கன்னிகன்னி ராசிக்காரர்கள் தாங்கள் அனைத்திலும் சரியானவர்கள் என்று கர்வம் கொண்டவர்கள் மற்றும் தாங்கள் தவறு செய்ததாக ஒருபோதும் நம்ப மாட்டார்கள். அவர்கள் ஒருவேளை மன்னிப்புக் கேட்டாலும், அது நேர்மையான மன்னிப்பாக இருக்காது. பல கன்னி ராசிக்காரர்கள் தங்கள் மனதிலிருந்து ஒருபோதும் மன்னிப்பு கேட்காத எரிச்சலூட்டும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். இது தவறான உறவின் விளைவாகவோ அல்லது ஆரம்பகால அதிர்ச்சியின் விளைவாகவோ இருக்கலாம். பொதுவாக அவர்கள் தங்கள் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பார்கள், அதற்குப் பதிலாக மன்னிப்பு கேட்க தேவைப்படாத நிலைக்கு வர முயற்சிப்பார்கள்.
தனுசுதனுசு ராசிக்காரர்கள் கடினமான ஆளுமை மற்றும் சுயமதிப்புக் கொண்டவர்கள் மற்றும் அவர்கள் எந்த அச்சுறுத்தலையும் பொருட்படுத்துவதில்லை. மற்றவர்களை தெரியாமல் காயப்படுத்தினாலும், தெரிந்தே காயப்படுத்தினாலும் அதற்கான மன்னிப்பு மட்டும் இவர்கள் வாயிலிருந்து வராது. ஒருவேளை அழுத்தத்தால் அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அது மனப்பூர்வமானதாக
இருக்காது. அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அதனை மற்றவர்கள் மறக்கும் படி சூழலை மாற்றிவிடுவார்கள். அவர்கள் உணர்ச்சிரீதியான இடைவெளி, எரிச்சல் மற்றும் ஆத்திரம் ஆகியவை வசதியான நிலைகளாக இருப்பதைக் காண்கிறார்கள், அதே நேரத்தில் உணர்ச்சிரீதியான நெருக்கம் மற்றும் அக்கறையை மிகவும் ஆபத்தானதாகக் கருதுகிறார்கள்.

கும்பம்கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் மற்றவர்களை விட அனைத்திலும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுகிறார்கள். மற்றவர்களின் கடுமையான அதிருப்தியை எதிர்கொண்டாலும்,
கும்ப ராசிக்காரர்கள் அவர்கள் சொல்வதை அமைதியாகக் கேட்பார்கள், இறுதியில் நேர்மையற்ற மன்னிப்பைக் கேட்பார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து மற்றவர்களின் குறைகளை சுட்டிக் காட்டுவார்கள். அவர்கள் உதட்டளவில் மன்னிப்புக் கேட்டாலும் அவர்களின் தவறுக்கு ஒருபோதும் வருந்தவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டார்கள்.