உலகம் தோன்றிய காலம் முதலே ஆணாதிக்கம் என்பது இருந்துதான் வருகிறது. துரதிர்ஷ்டவசமாக ஆணாதிக்கத்தால் ஆளப்படும் நாடுகளில் பெண்கள் ஆண்களை விட தாழ்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். பெண்களை ஒரு பொம்மையாக மட்டுமே நினைக்கும் வழக்கம் இன்றும் பெரும்பாலான ஆண்கள் மனதில் இருக்கிறது. பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் மற்றும் வன்முறை போன்ற கடினமான சூழ்நிலைகளை மீறி வலுவான தலைவர்களாக உருவெடுத்ததை நாம் பார்த்திருக்கிறோம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி பெண்களின் பிறந்த ராசிக்கும் அவர்களின் ஆளுமைக்கும் ன் நிறைய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. சில ராசி பெண்கள் யாராலும் தோற்க முடியாதவர்களாகவும், தாங்கள் சார்ந்த சமூகத்தில் சக்திவாய்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்ம ராசி பெண்கள் ஒரு இடத்தில் நுழையும் போது அவர்களின் ஆளுமை மற்றும் கெத்தான தோரணை காரணாமாக அனைவரின் கண்களும் அவர்களின் மீதுதான் இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சிம்ம ராசி பெண்கள் மிகவும் உறுதியான நபர்களில் ஒருவராக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைக் கையில் எடுத்து விட்டால் அந்த விஷயம் முடிந்து விட்டது என்று அர்த்தம். எதிர்காலத்தில் அவர்கள் வலுவான தலைவர்களாக வருவார்கள்.
மேஷ ராசி பெண்கள் தங்களுக்குள் எப்போதும் எரியும் நெருப்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மேஷ ராசி பெண்கள் லட்சியம், வலிமையான மற்றும் மனக்கிளர்ச்சி கொண்டவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள். இவர்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், எதையும் எளிதில் விட்டுக்கொடுக்கும் பழக்கம் இவர்களுக்குக் கிடையாது. அவர்களை தடுக்க எதுவுமில்லை என்றால் அவர்களின் வெற்றிப்பயணம் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ரிஷபம்ரிஷப ராசி பெண்கள் வலிமையானவர்கள், சுதந்திரமானவர்கள், வாழ்க்கையில் எந்தக் கஷ்டம் வந்தாலும் எதிர்த்து போராடக்கூடியவர்கள். அவள் புத்திசாலிகளாக இருந்தாலும் கடுமையான பிடிவாதம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த பிடிவாதம் அவர்களின் வேலைகளிலும் பிரதிபலிக்கும், ரிஷப ராசிப் பெண்கள் எந்தப் பணியையும் பாதியில் விடமாட்டார்கள். காதல் மற்றும் திருமண உறவில் அவர்கள் எப்போதும் யாரையும் சார்ந்திருக்க மாட்டார்கள்.
மகரம்மகர ராசி பெண்கள் குறைந்த பயமும், அதிக நம்பிக்கையும் கொண்டவர்கள். நல்ல செயல்களை நல்ல மனதுடன் செய்வதால் அவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள். ஒரு மகர ராசி பெண் எப்போதும் வெற்றிகரமான ஒருவராக அறியப்படுகிறார்,

ஏனென்றால் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் பின்வாங்குவதில்லை. குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி அனைத்திலும் அவர்களின் கையே மேலோங்கி இருக்கும். மற்றவர்கள் வெற்றிக்காக கடினமாக உழைக்கும் போது இவர்களுக்கு அது இயற்கையாகவே வரும்.