புதுவருடத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி.!

செய்திகள்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு இன்று (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டே இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்விச் செயற்பாடுகளின் முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் ஏப்ரல் 17 ஆம் திகதி முதல் மே 12 வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.அத்தோடு, மே 13 முதல் மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.மேலும் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் மே 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.