ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு கிரகங்களால் ஆளப்படுகின்றன. அப்படி ராசிக்குரிய கிரகங்கள் அந்த ராசியில் முழு விளைவைக் கொண்டுள்ளன. ஒருவரது எதிர்காலம் மற்றும் குணாதிசயங்கள் கூட ராசிகளின் அடிப்படையில் பெறப்படுகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது, வாழ்க்கையில் ஏராளமான செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கும் ராசிக்காரர்களைப் பற்றி தான்.

இப்படி சில ராசிக்காரர்கள் செல்வத்தையும், புகழையும் அதிகம் சம்பாதிப்பதற்கு புதன் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களின் கருணை பார்வை விழுவது தான். மேலும் இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் பின்தங்கியதில்லை. இப்போது எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்ஜோதிடத்தின் படி, மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால் இந்த ராசியின் மீது புதன் ஒரு சிறப்பான விளைவைக் கொண்டுள்ளது. அதனால் தான் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய செல்வத்தையும், புகழையும் சம்பாதிக்கிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். அதோடு இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் செய்யும் எந்த வேலையிலும் வெற்றியை அடைவார்கள்.

கன்னிஜோதிடத்தின் படி, கன்னி ராசியின் அதிபதி புதன். எனவே தான் கன்னி ராசிக்காரர்களின் மீது புதனுக்கு தனிப்பாசம் உண்டு. இந்த ராசிக்காரர்கள் எந்த துறையிலும் வெற்றியை அடைவதற்கு இதுவும் ஓர் காரணம். இதனால் தான் இவர்கள் நிறைய புகழையும் செல்வத்தையும் சம்பாதிக்கிறார்கள். செய்யும் வேலை/தொழிலில் வெற்றி பெறுவதற்கு இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பு தான் காரணம். மொத்தத்தில் கன்னி ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
மகரம்ஜோதிடத்தின் படி, மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசிக்காரர்கள் சனி பகவானின் அருளைப் பெற்றவர்கள். அதோடு இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் நேர்மையானவர்கள். வாழ்க்கையில் நிறைய புகழையும், செல்வத்தையும் சம்பாதிப்பதற்கு இவர்களின் இந்த குணமும் ஓர் முக்கிய காரணம். சனி பகவானின் அருளால், இந்த ராசிக்காரர்கள் செய்யும் ஒவ்வொரு பணியிலும் வெற்றி பெறுகிறார்கள்.

கும்பம்ஜோதிடத்தின் படி, கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். எனவே தான் இந்த ராசிக்காரர்களிடம் சனி பகவான் கனிவாக இருக்கிறார். வாழ்வில் இந்த ராசிக்காரர்கள் வெற்றியைப் பெறுவதற்காக கடுமையாக உழைக்கிறார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.