இலங்கை வாழ் மக்களுக்கு வெளிநாடு செல்ல அரிய வாய்ப்பு..!! வரும் 27ம் திகதி முதல் ஆரம்பம்.!

செய்திகள்

இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்புகளுக்காக வாய்ப்பளிக்கப்படவுள்ளதாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் விண்ணப்பங்கள கோரப்படவுள்ளன.


வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக, இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.பாரவூர்தி சாரதிகள், கட்டுமான தொழில்துறையினர், உணவக துறை, மின்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளில், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகள் மற்றும் இலங்கை என்பவற்றின் பணியாளர்களுக்காக 87,702 விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.