கொழும்பு – காலிமுகத்திடல் பகுதிக்கு இன்று காலை முதல் மக்கள் படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் அப்பகுதிக்கு எமது செய்திக்குழு விரைந்த நிலையில் மக்கள் அங்கு வருவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

அதன்படி அப்பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகளை பார்வையிடுவதற்காகவே இவ்வாறு பெருந்திரளானோர்
வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்அத்துடன் குறித்த பகுதி ஆமைகளை பாதுகாக்கும் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் வனஜீவராசிகள் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
