இலங்கையில் வங்கியில் பணத்தினை எடுப்பவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி செய்தி..!!!

செய்திகள்

வங்கியில் சேமிப்பு கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை மீளப் பெரும் போது 50 ரூபா வரையில் வரி அறவீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கி புத்தகம் மூலம் இரண்டு லட்ஷம் ரூபாவிற்கு குறைந்த தொகையினை மீளப்பெறும் போது 15 ரூபா முதல் 50 ரூபா வரையில் வணிக வங்கிகள் வரி அறவிடுவதாக


சிங்கள ஊடகமொன்றுக்கு செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் ஒருவர் சேமிப்பு கணக்கு புத்தகத்தை பயன்படுத்தி 50 ரூபா பணம் வங்கியிலிருந்து மீளப்பெற்றுகொண்டால் அதற்கு நிகரான தொகை வரியாக அறவீடு செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. நாட்டின் முன்னணி வணிக வங்கியொன்று

பணம் மீளப்பெறும் போது 50ரூபா வரி அறவீடு செய்வதுடன் மற்றுமொரு வங்கி 15 ரூபா வரி அறவீடு செய்கின்றது. 50 ரூபா அறவீடு செய்யும் வங்கியிடம் இது பற்றி வினவிய போது எ .டி .ம் மூலம் பணம் மீளப்பெறும் போது இவ்வாறு வரி அறவீடு செய்யப்படுவதில்லை என்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஊடாக 2 லட்ஷத்துக்கு


குறைந்த தொகை மீளப்பெறும் போது மட்டும் வரி அறவீடு செய்வதாக தெரிவித்துள்ளது.வங்கி அட்டை இல்லாதவர்கள் மாதமொன்றுக்கு 10 தடவைகள் பணம் மீள பெற்றால் அவர்கள் 500 ரூபா வரையில் செலுத்த நேரிடும் எனவும் அநீதியானது என வாடிக்கையாளர்கள் விசனம் வெளியிட்டதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.