தூரத்தில் ரயில் வரும்போது ரயில்பாதையை கடக்கும் வாகனங்களின் இன்ஜின்கள் திடீரென ரயில்பாதையின் நடுவில் நின்று, இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் ரயிலில் சிக்கிக் கொள்ளும் விபத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் ஏன் அப்படி நடக்கிறது??வாருங்கள் இப்போது அதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்.

இதுபோன்ற விபத்து நடக்கும் இடத்தில் இருந்த பலர், இன்ஜினில் இருந்து வெளிவரும் காந்தப்புலத்தால்,(magnetic field) வாகனங்களின் இன்ஜின்கள் செயலிழந்ததாக கருதுகின்றனர்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??.ஆனால், இதைப் பற்றி பேசுவதற்கு முன், ஒரு ரயில் என்ஜின் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
ரயிலின் எஞ்சின் ஒரு நடமாடும் மின் உற்பத்தி நிலையம் போன்றது. ஏனென்றால் அதற்குள் ஒரு இன்ஜினைத் தாண்டி இன்னும் பல அம்சங்கள் உள்ளன.சாதாரண இன்ஜின் மற்றும் கியர் சிஸ்டம் ரயிலுக்கு இல்லை. அதிக rpm இல் இன்ஜின் கூட சில வேளை வெடிக்கலாம்.எனவே ரயில் சக்கரங்கள் எலெக்ட்ரிக் மூலமாகவே திருப்ப வேண்டும். அதாவது மோட்டர்கள் மூலம்.

ரயிலின் locomotive அல்லது பொதுவான மொழியில், இன்ஜின் பெட்டிக்குள் ஒரு பெரிய உள் எரிப்பு இயந்திரம் உள்ளது.இது டீசலில் வேலை செய்கிறது.1 கிமீ செல்ல சுமார் 5 லிட்டர் டீசல் தேவை.அந்த எஞ்சினுடன் ஒரு பெரிய ஜெனரேட்டர் இணைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டரால் உற்பத்தி செய்யப்படும் AC மின்சாரம் அடுத்ததாக ஒரு மின்மாற்றிக்கு செல்கிறது. மின்மாற்றி தேவையான மின்னழுத்தத்தை உருவாக்கியதும், அது rectifiers க்கு செல்கிறது. அங்குதான் இந்த AC மின்சாரம் DC மின்சாரமாக மாற்றப்படுகிறது.
அடுத்து இந்த DC மின்சாரம் இன்வெர்ட்டர் மூலம் மீண்டும் AC யாக மாற்றி ரயில் சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் டிராக்ஷன் மோட்டார்ஸ்(Traction Motors) எனப்படும் மோட்டார்களுக்கு கொடுக்கப்படுகிறது… அந்த மோட்டார்களில் இருந்துதான் ரயிலின் சக்கரங்கள் சுழன்று ரயில் முன்னோக்கி நகர்கிறது.. . இந்த உள் பாகங்கள் ஒரு பெரிய ரேடியேட்டர் சிஸ்டம் மூலம் குளிர்விக்கப்படுகிறது. எனவே, டீசல் ரயில் என்று நினைத்தாலும், உண்மையில் பார்த்தால், இது ஒரு வகையான மின்சார ரயில் தான்.

உலகில் AC மற்றும் DC ரயில்கள் இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன.குறைந்த உற்பத்திச் செலவு மற்றும் எளிதாகப் பெறும் திறன் போன்ற பல காரணங்களால் கடந்த காலங்களில் DC ரயில்கள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டன.ஆனால் 2000 ஆண்டிற்க்கு பிறகு இலங்கைக்கு வந்த ட்ரெயின் அதிகமாக AC மின்சாரம் மூலம் செயற்படும் புதிய தொழில்நுட்ப என்ஜின் ஆகும்.இப்போது நம் தலைப்புக்கு வருவோம். அந்த மோட்டார் ஜெனரேட்டர்கள் நீங்கள் சொல்லும் மின்காந்த புலத்தை உருவாக்க முடியுமா????ஒரு போதும் இல்லை. அது வெறும் கட்டுக்கதை!!.
லோகோமோட்டிவ் பாகங்கள் உருவாக்கும் மின்காந்த விசையால் ரயில்வேயின் ஓரத்தில் உள்ள ஏதேனும் ஒன்றை இல்லிப்ப அளவு கூட நகர்த்த முடியாது. சுருக்கமாகச் சொன்னால், மோட்டாரிலிருந்து ஒரு சென்டிமீட்டர் தூரத்தில் காந்த ஆற்றல் இருக்கிறதா என அளந்தாலும், அதைக் கண்டுபிடிப்பதே கடினமாக இருக்கும். அவ்வளவு
சிறியது. மேலும் காந்த விசையானது மூலத்திலிருந்து “தூரத்தின் சதுரத்திற்கு” நேர்மாறான விகிதத்தில் உள்ளது. அதாவது ஒரு சென்டிமீட்டர் தூரத்தில் உணரப்படும் காந்த சக்தியில் 1/4 பங்கு 2 சென்டிமீட்டர் தூரத்தில் உணரப்படுகிறது. 3 செமீ என்றால் 1/9 ஆகும். எனவே ரயிலில் இருந்து காந்த சக்தி வெளிப்படுவதில்லை என்று நீங்கள் முடிவு செய்யலாம்..
எனவே, அத்தகைய காந்தக் கருத்துக்கள் அனைத்தையும் நிராகரிக்கலாம்.ரயில் பாதையில் ரயில் சக்கரங்களால் ஏற்படும் அழுத்தம் அல்லது 2 இரும்புத் துண்டுகள் மோதுவதால் இந்த காந்த சக்தி ஏற்படுகிறது என்பது இன்னும் ஒரு கருத்து.

இரும்புத் துண்டுகள் மோதி காந்த விசை உருவாகினால், ரயில் எஞ்சின் தான் முதலில் காந்தமாக மாறும். அப்போது சுற்றியிருக்கும் இரும்புத் துண்டுகள் அனைத்தும் ரயில் இன்ஜினில் வந்து ஒட்டிக்கொள்ளும். இதுவும் எளிதில் களையக்கூடிய ஒரு கட்டுக்கதை.ரயில் எஞ்சின் அதிர்வெண் காரணமாக கார் அல்லது வாகன எஞ்சின் பாகங்கள் அதிர்வு காரணமாக இன்ஜினை செயலிழக்கச் செய்தல்.
அதிர்வு என்றால் என்ன? உதாரணமாக. மின்னல் தாக்கும் போது ஜன்னல்கள் நடுங்குகின்றன. மின்னலின் அதிர்வெண் கண்ணாடியின் இயற்கையான அதிர்வெண்ணுக்கு சமமாக இருக்கும்போது, கண்ணாடி அதே வழியில் அதிர்வுறும். அந்த நிகழ்வு வெறுமனே அதிர்வு என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக கண்ணாடி உடைந்து சிதறுகிறது.எனவே ரயில் என்ஜினின் அதிர்வெண், காரின் எஞ்சின் பாகங்களின் அதிர்வுகளாக இருக்க முடியுமா?
யோசித்துப் பார்த்தால், ரயிலுக்கு இணையாக, சமாந்திரமாக சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட வேண்டும், இல்லையா? ரயில் புறப்பட்ட பிறகு ரயில்வேயைக் கடக்கும் வாகனங்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட வேண்டும், இல்லையா? ரயில் புறப்படும் வரை ரயில்பாதை ஓரத்தில் நிறுத்தப்படும்
வாகனங்களுக்கும் இதே நிலை வரக் கூடாதா? ஆனால் அப்படி எதுவும் நடப்பதில்லை . எனவே இந்த அதிர்வுக் கதையையும் விலக்கி விடுங்கள் .அத்தகைய அதிர்வு காரணமாக என்ஜின்/பிஸ்டன் நின்று விடும் என்றால் முதலில் , ரயில் எஞ்சினுக்குள் இருக்கும் பாகங்கள் தான் நிற்கும்.இதுபோன்ற பல கட்டுக்கதைகள் உள்ளன. இதெல்லாம் பொய் என்றால்.உண்மையான காரணம் என்ன??
வழக்கமாக, ஒரு ஓட்டுநர் ரயில் பாதையின் குறுக்கே வாகனத்தை மிக மெதுவாக ஓட்டுவார். இலங்கையில் உள்ள பல ரயில் கடவைகளில், சாலையை விட ரயில் பாதைகள் சற்று உயரமாக உள்ளது. எனவே ரயில் பாதையைக் கடப்பது சிறிய மலையில் ஏறி இறங்குவது போன்றது. மேனுவல் வாகனங்களை ஓட்டுபவர்கள்
தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் வாகனத்தை மிக மெதுவாக மலையில் ஓட்டுவது மிகவும் கடினம் என்பதை அறிந்திருக்கிறார்கள். கிளட்ச் பேலன்ஸ் செய்வதில் நல்ல பழக்கம் இல்லாத ஒருவருக்கு, இது எளிதான காரியம் அல்ல. சிறிய தவறு ஏற்பட்டால், வாகனத்தின் இயந்திரம் நின்றுவிடும். எனவே, அந்த காரணத்தினாலோ அல்லது வேறு ஏதேனும் சீரற்ற காரணங்களினாலோ, வாகனத்தின் இன்ஜின் ரயில் பாதையில் நிற்கலாம்.
ஆனால் பிறகு ஏன் அதை மீண்டும் start பண்ண முடியாது?காரணம் மிகவும் எளிமையானது. இது பயத்தால் நிகழ்கிறது, வேறு எதுவும் இல்லை. என்ஜின் நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்திற்குள் நீங்கள் சிக்கிக்கொண்டிருக்கும்போது, ஒரு ரயில் உங்களை நோக்கி வருவதைப் பார்த்தால், கிளட்ச் balance என்ன… வாகனம் என்ன ? இந்த பதட்டத்தால் சிலர் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய விரும்புவதில்லை. காரணம் இப்போது புரிகிறதா?
மேலும், உடைந்த கார்பரேட்டர்கள் கொண்ட பழைய வாகனங்களும் ரயில் பாதையில் வாகனம் slow ஆவதால் air intake குறைவதால் நிறுத்தப்படலாம்.அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, இதுபோன்ற விபத்தில் சிக்குபவர்களில் சுமார் 75% ஆண்கள். அதற்குக் காரணம், தேவையில்லாத ரிஸ்க் எடுத்து, ரயில் வருவதை கண்ட பின்னும் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே வாகனத்தை ஓட்ட முயன்றதுதான்.
எனவே, ரயில் செல்ல முன்னர் ரயில்வே கடவையை கடந்து இரண்டு நிமிடங்களைச் சேமித்து சாதனை செய்வதில் எந்தப் பயனும் இல்லை, எனவே இதுபோன்ற தேவையற்ற ரிஸ்குகளை எடுக்க வேண்டாம், ரயில் வரும் வரை பொறுமையாக இருங்கள். இல்லையெனில், உங்கள் பெறுமதியான வாழ்க்கையையும், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளின் பொன்னான நேரத்தையும் நீங்கள் வீணடிக்கலாம்.©️பதிப்புரிமை ரெஹான் மெண்டிஸ்