இலங்கை முன்னால் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரணை..!! வெளியான முக்கிய செய்தி..!!

செய்திகள்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.அதிபர் மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பிலேயே இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.குறித்த பணம் தொடர்பில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களின் போது அதிபர் மாளிகையில் இருந்து ஒருதொகை பணம் போராட்டகாரர்களால் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.