தற்போது கிடைத்த செய்தி..!! இலங்கையில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள்..!!

செய்திகள்

இலங்கையில் QR கோட்டா முறையை புறக்கணித்து எரிபொருள் விநியோகம் செய்த பெட்ரோல் நிலையங்களின் உரிமம் உடனடியாக இரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.பல எரிபொருள் நிரப்பு


நிலையங்கள் எரிபொருள் விநியோகம் செய்யும் போது தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுடன்

நேற்று நடைபெற்றகூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.QR விநியோக பொறிமுறையை மறுஆய்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது, அதன் பிறகு கோட்டா முறையைப் பின்பற்றாத பல பெட்ரோல் நிலையங்களை இடைநிறுத்த முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *