பொங்கலை கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்துள்ளார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்த

பகுதியிலிருந்து போராட்டகாரர்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.மேலும், நீர்த்தாரை பிரயோகத்தினை பொலிஸார் மேற்கொண்ட நிலையில் சில இளைஞர்கள் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
