முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற பாரிய


போராட்டத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று

(13) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரி கடந்த ஜூலை மாதம் பாரியளவில் நாட்டில் போராட்டங்கள் வெடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *