திணறும் இலங்கை..!! IMF போட்ட அதிரடி நடவடிக்கை..!!

செய்திகள்

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.


“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்து கடன் வாங்கி வருவதால்தான், எங்களால் கடனை அடைக்க முடியாமல், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார் .

இந்நிலையில் இப்போது நாம் கடனாளிகளுக்கு அந்தக் கடன்களை செலுத்தாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்களால் பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளனர்.எனவே பணத்தை வடிவமைக்க அனுமதி இல்லை. அந்தச் சூழ்நிலையில்தான் நாட்டின் நிதியை நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *