ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு!

செய்திகள்

ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஓய்வுபெற்ற தொடருந்து ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.தொடருந்து அதிகாரிகளுக்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில்


இன்று (10) காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.ஓய்வுபெற்ற தொடருந்து ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள்சேர்ப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என புகையிரத பொது மேலாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.சேவையின் தேவையின் அடிப்படையில் அவர்களை மீண்டும்

ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்ள பொதுச் சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்கப்பெறும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த மாதம் 31 ஆம் திகதி தொடருந்து சேவையில் இருந்து சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்து, அத்தியவசிய சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஊழியர்களை மீளப் பணியமர்த்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *