மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தற்போது வெளியான முக்கிய செய்தி.!!

செய்திகள்

உத்தேச மின்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளதுடன், இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நட்டத்தைச் சந்திக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என தெரிவித்து 6.9 மில்லியன் மின் பாவனையாளர்கள் கையொப்பமிட்ட பொது மனுவை இன்று தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்டஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, குறைந்தபட்சம் ரூ. 35 பில்லியன் இலங்கை மின்சார சபையிலிருந்து மறைமுகமாக வெளியேறுகிறது எனவே மின்சார சபை நஷ்டம் அடையாது என தெரிவித்தார்.

நஷ்டத்திற்கு முக்கிய காரணம் ரூபா35 பில்லியன் என்பதை துல்லியமாக நிர்வகிக்க இயலாமையே ஆகும். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்போது நாட்டின் வழமையான வரிக் கொள்கை மீறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *