வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இதன்படி, அதிக ஒலி எழுப்பி பல்வேறு வகையான வர்ண விளக்குகளை ஒளிரவிட்டு வீதியில்

பயணிக்கும் வாகனங்களைக் கைப்பற்றுமாறு பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.அவ்வாறான வாகனங்களைக் கைப்பற்றி அதனைச் செலுத்துபவர்களைக் கைது செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
