இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை.!!

செய்திகள்

நாட்டில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.அதன்படி சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில்


உள்ள சட்டங்களை சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள

நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி ரணில் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கையில் பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளபோதிலும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் இல்லை எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *