யாழ்.கோப்பாயில் 3 வாகனங்கள் மோதி விபத்து.யாழ்ப்பாணம் – கோப்பாயில் இன்று காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோப்பாய் கிருஷ்ணன் கோவிலடிச் சந்திப் பகுதியில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கோப்பாய் உரும்பிராய் – நல்லூர் இராச பாதை இரண்டும் சந்திக்கும் பகுதியிலேயே

குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.ஆபத்தான சந்தியாகத் திகழும் குறித்த சந்திப் பகுதியில் விபத்துச் சம்பங்கள் பல நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது