பல பேருக்கு புரிவதில்லை ஒரே தரத்தில் இரண்டு லட்சம் ரூபா இல்லையென்றால் ஒரு லட்சம் ரூபா தான் வைப்பிலிட முடியும்.பணம் வைப்பிலிடும் இயந்திரத்தின் மேலே தெளிவாக எழுதியுள்ளனர் அதை வாசிக்காமல் சிலர் செய்யும் தவறு

அப்படி பணம் சிக்கி விட்டால் அந்த இயந்திரத்தை சரி செய்து திரும்ப இயங்க செய்ய வைப்பதற்கு சரியாக ஒரு மணித்தியாலத்திற்கு மேலே தேவைப்படுகின்றது.றபர் பான்ட் அவிழ்க்காமல் அப்படியே போடுவது.குறிப்பிட்ட தாள்களுக்கு மேலதிகமாக போடுவது

ஞாயிறு போயா அரச வங்கி விடுமுறை நாட்களில் அவ்வாறு நடந்தால் மீண்டும் வங்கி திறக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது .வேறு ஒரு நபர் அவசரத்திற்கு அவரால் பணம் வைப்பிலிட முடியாது.தயவு சாய்த்து சிந்தித்து செயல்படுங்கள்.ஓரிருவர் செய்யும் தவறினால் பலரும் இயந்திரம் பழுதுபார்க்கும் வரை தமது வங்கி நடவடிக்கைகளைப் பூரணப்படுத்த முடியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

