தொடருந்தில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!! யாழ்ப்பாணம் வரை செல்லலாம்..!! தற்போது கிடைத்த தகவல்..!!

செய்திகள்

தொடருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி வடக்கு தொடருந்து வீதியில் இன்று (05.01.2022) முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் வரை மட்டுமே தொடருந்துகள் இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.


மஹவ மற்றும் ஓமந்தை பகுதிகளுக்கு இடையிலான தொடருந்து வீதியின் நவீனமயமாக்கல் பணிகள் ஆரம்பிக்கப்படுவதால் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை மாத்திரம் தொடருந்து சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க

தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு அநுராதபுரத்தில் இருந்து பேருந்துகள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *