இம்மாதம் முதல் கடவுச்சீட்டுகளை இணைய வழியில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஏற்றுக்கொள்ளவுள்ளது.இது தொடர்பாக திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் சம்பிகா ராமவிக்ரம இதனைத் கடந்த மாதம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்தப் புதிய இணையவழி விண்ணப்ப முறையின் மூலம், விண்ணப்பதாரர் கைரேகை போன்ற பயோமெட்ரிக் தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளர்.

இதற்காக தெரிவுசெய்யப்பட்ட 50 பிரதேச செயலகங்களில் அலுவலக மையங்களை நிறுவுவதற்கு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்திட்டத்தின் மூலம், ஒரு விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை வீட்டில் இருந்தபடியே திணைக்களத்துக்குச் சமர்ப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பான முழுவிபரங்கள் வந்தவுடன் இதில் பதிவிடுவேன்.
