இந்த வருடம் ஐந்து ராசிக்காரர்களும் முரட்டுசிங்கிளாகவே இருப்பார்களாம்..!!

ஜோதிடம்

காதல் அனைவருக்கும் பிடித்த மற்றும் அவசியமான உணர்வாக இருந்தாலும் அனைவருக்கும் அது மகிழ்ச்சிகரமானதாக இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது என்றுதான் கூற வேண்டும். பலர் உணர்வுபூர்வமான காதலில் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் ஒருவருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புகிறார்கள், சிலர் ஒருவருடன் இருப்பதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.


விதிவிலக்காக, சிலர் தங்கள் சுதந்திரத்தை பெரிதாக விரும்பும் ஆன்மாவாக இருக்கிறார்கள் மற்றும் ஒரு காதலில் ஈடுபடும்போது பல கண்டிஷன்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள், இல்லையெனில் சிங்கிளாக இருப்பதை விரும்புகிறார்கள்.ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் காதல் உறவுகளைத் தவிர்க்கும் அல்லது ஒருவருடன் இருக்க முடிவெடுப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்களாக இருப்பார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்இந்த இராசிக்காரர்கள் நீண்ட கால உறவில் இருக்க விரும்புவதில்லை. அபப்டி அவர்கள் ஒரு உறவில் இருந்தால், அவர்கள் தங்களை மிகவும் கட்டுப்படுத்துகிறார்கள். இதன் அர்த்தம் அவர்கள் நெருக்கத்தை விரும்புவதில்லை என்பதல்ல, அவர்கள் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களிலிருந்து விலகி இருக்க

விரும்புகிறார்கள். உறவுகள் என்று வரும்போது அவர்கள் மிகவும் மாறும் மனநிலையுடனும், சூடாகவும், குளிராகவும் இருக்கிறார்கள். தங்களுக்கு இந்த பிரச்சினை இருப்பதாக அவர்களுக்குத் தெரியும், எனவே அவர்கள் அனைத்தையும் அறிந்தே உறவில் ஈடுபடுவார்கள்.


தனுசுதனுசு ராசிக்காரர்கள் அவர்களின் சுதந்திரத்தை மிகவும் விரும்புகிறார்கள். அவர்கள் ஒரு உறவில் ஈடுபட்டால், மற்றவர் உறவில் நெருக்கமாக இல்லை என்று தெரிந்தால் மட்டுமே அவர்கள் இதைச் செய்வார்கள். ஒரு புதிய துணையைத் தேர்ந்தெடுக்கும்போது அல்லது உறவில் ஈடுபடும்போது அவர்கள் மிகவும்

பயப்படுகிறார்கள். அவர்கள் ரகசியமாக ஒருவருடன் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் ஒரே மாதிரியான ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவருடன் இருக்க வேண்டும். அதில் பயணம் செய்வதும் அடங்கும்.


கும்பம்இந்த ராசிக்காரர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் சுதந்திரமானவர்கள். அவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தங்கள் சொந்த இடத்தில் வெவ்வேறு யோசனைகளைப் பற்றி சிந்திக்கவும் எண்ணங்களை வளர்க்கவும் விரும்புகிறார்கள். மற்றபடி அவர்கள் மிகவும் அக்கறையுடனும் இரக்கத்துடனும் இருப்பார்கள்.

மீனம்அவர்கள் ஒருவர் மீது ஈர்க்கப்படலாம், ஆனால் அது காதல் என்று வரும்போது, அவர்கள் மிகவும் உறுதியாக இருப்பதில்லை. மீன் ராசிக்காரர்கள் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், அவர்கள் அனைவருக்கும் கவனிப்பும் கவனமும் தேவை, மற்றவர் அவர்களை மதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்கள் உங்களுக்கு அர்ப்பணிப்பைக் கொடுப்பார்கள் மற்றும் மகிழ்ச்சியுடன் பாசத்தைக் காட்டுவார்கள், ஆனால் அவர்களிடம் இருக்கும் எதிர்மறை குணம் என்னவெனில் அவர்கள் மிக விரைவாக விலகிவிடுவார்கள். அத்தகைய நல்ல துணைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்று நினைப்பது முதல் சில சிறிய கருத்துகளை அவர்களின் மனதில் ஒரு பெரிய விமர்சனமாக வளர்ப்பது வரை, மீனம் பெரும்பாலும் உறவில் இருந்து வெளியேற தங்கள் சொந்த வழியைத் தேடுகிறார்கள்.


கன்னிகன்னி ராசிக்காரர்கள் யாரையும் நேசிப்பது அல்லது நம்புவது போன்ற விஷயங்களில் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இந்த ராசியின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் தங்களை விட மற்றவர்களை மிகவும் விமர்சிக்கிறார்கள். அவர்கள் மனதில் காதலுக்கென ஒரு தனிப்பட்ட உருவகம் உள்ளது, அந்த தகுதிகளுடன் இருக்கும் ஒருவரை பார்க்கும்போது அவர்கள் காதலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதிலும் அவர்களுக்கு சவால்கள் இல்லாமல் இருக்காது.

மற்ற ராசிக்காரர்கள்மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்குப் காதலில் ஈடுபடுவதில் பிரச்சினை இருக்காது ஆனால் காதலில் பிரச்சினை எழும்போது நிச்சயம் அவர்கள் அந்த உறவை விட்டு வெளியேற தயங்க மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *